Tamil News Live Today: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 29-ஆக அதிகரிப்பு – முதல்வர் இன்று அவசர ஆலோசனை | Tamil News Live Today updates dated on 20 06 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 29-ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று இரவு வரை 16 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இரவு தாண்டியும் பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வந்ததால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

இந்த விஷசாராயம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-யிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த விவகாரத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *